ஆத்திக கலைஞர் ! பகுதி -1

திமுக ஆட்சிக்கு வந்தால் கோவில்கள் எல்லாம் இடிக்கப்படும் என்று வதந்தி பரப்பப்பட்டது !

அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார்,      அவர் அப்படிச்செய்ய மாட்டார் என்றனர் ஒரு தரப்பினர் , இல்லை அவரும் இந்துமதம் எதிர்ப்பாளர்  தான் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவார் என்றனர் ஒரு தரப்பினர்ஆட்சிக்குவந்தவுடன் அப்படியா செய்தனர்? .  நடந்து என்ன என்று பார்ப்போமா?

 கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர முதல்வர் அண்ணா ஆணையிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் அங்கேயே சென்று தங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். அப்போது கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைச்சேர்ந்த எதிர்க்கட்சி காசிராமன், முதல்வர் அண்ணாவையும் அமைச்சர் கலைஞரையும் பாராட்டிப்பேசியது அவைக்குறிப்பில் இன்றும்  இருக்கிறது.

 

1969 அண்ணா மறைந்தார் , தலைவர்கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று அப்பொறுப்பில் அமர்கிறார்.

 

இப்பொழுது யூகங்கள் இன்னும் பெரிதாக இருக்கின்றன, அண்ணாவாவது தேவன் என்று ஒருவன்  இருக்கிறான் என்று ஒப்புக்கொண்டார்,ஆனால் நால்வர்ணத்தை எப்பொழுதும் திராவிடர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அண்ணா கூறியதை வசதியாக மறந்துவிட்டனர்.  ஆனால் கலைஞரோ தீவிர நாத்திகவாதி கண்டிப்பாக இந்துக்களுக்கு எதிராக வினையாற்றப் போகிறார் என்று பேசினார்கள் .

 

ஆம் கலைஞர் தீவிர நாத்திகவாதி தான். குறிப்பாக இந்து மத மூட பழக்க வழக்கம் மற்றும் இந்துத்துவத்திற்கும், பார்பனியத்திரமும் எதிராக நின்றவர், அவாக்களுக்குப் பயம் வரத்தானே செய்யும். ஆனால் நடந்தது என்னவோ அவர்கள் நினைத்ததற்கு மாறாக!

பெரியாரின் சீடனாக, அண்ணாவின் தம்பியாக,தமிழினத் தலைவராக, தமிழ்ப்புலவராக மட்டுமில்லை, கோவில்தர்மகர்த்தாவைப் போல ஆலயங்களையும் காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

வாருங்கள்  அவர் ஆட்சியில் அவர் செய்த திருப்பணிகளின் தொகுப்பையும், இந்து மத கோவில்களின் , ஆலயங்களின் , அதில் பணிபுரியும் அர்ச்சகர்கள் என்று அணைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்து அவர் செய்தவற்றை காண்போம்.

v எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மன்னராட்சி காலத்தில் அமைக்கப்பட்டததிருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில். எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அக்கோவில் கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணிசெய்தார் முதல்வர் கலைஞர்.

v சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் திருப்பணியை 1975 மார்ச் மாதம் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

 

v பேரூர் பட்டிப் பெருமாள் கோவில் திருப்பணியை முடித்து 1975 இல் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

 

v சென்னை வடபழனி முருகர் கோவில் குடமுழுக்கை ஆம் ஆண்டு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

 

v  பழனி தண்டாயுதபாணி கோவில் விமானத்துக்குத் தங்கத் தகடுகள் போட்டுநாற்பது லட்சம் செலவில் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

 

v  தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோயில் குடமுழுக்கு ,கொடுமுடி மகுடேசுவரசாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலசாமி கோவில் குடமுழுக்கு, இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் குடமுழுக்கு, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணிகள் முதல்வர் கலைஞர் காலத்தில்தான் நடந்தன.

 

v பழனிக்கோவில் மலைப் பகுதியை விரிவுபடுத்தும் திருப்பணி வேலைகளைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர். பழனி கோவில் திருப்பணி தொடக்க விழாவுக்கு முதல்வர் கலைஞரே சென்று

தொடங்கி வைத்தார். அக்கோவில் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளித்தொடக்கவிழாவுக்கும் முதல்வர் கலைஞரே சென்றார்.

 

v ெல்லையப்பர் கோவில் கலைக்கூடம் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தவர் முதல்வர் கலைஞர்.

 

v நெல்லை கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

 

v சங்கரன்கோவில் ஆலயத்திருப்பணிகள், திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் திருப்பணிகள் தி.மு.க. ஆட்சி யில்தான் தொடங்கப்பட்டது.

 

v ஆழ்வார் திருநகர் வடுவூர் கோதண்ட ராமசாமி கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம் பருத்தியப்பர் கோவில், பத்தணைநல்லூர் கோவில், திருமுல்லைவாயில் கோவில், மதுரை கூடலழகர் கோவில்,சோளிங்கர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோவில், சிதம்பரம் நடராசர்கோவில், திருமுஷ்ணம் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், வட சென்னை பாலசுப்பிரமணியர் கோவில், இடும்பாவனம், தாராபுரம், மூலனூர், வஞ்சியம்மன் கோவில், அவிநாசி கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோவில் ஆகியவைகளில் திருப்பணி முடிந்தும், குடமுழுக்கு நடைபெற்றும் இருந்த நேரத்தில்தான் 1976 ல் கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

 

v திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சென்னிமலை ஆகிய மலைக்கோவில்களும் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான்.

 

அதாவது சிறியதும் பெரியதுமான ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளை அந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் (1967 - 75) செய்து காட்டியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

 

எந்த கோவில் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தால் இடிக்கப்படும் என்று கூறினார்களோ , அத்தகைய கோவில்கள் மட்டும் இல்லாமல் அழிவின் விளிம்பிலிருந்த கோவில்களைத் தேடித்தேடி கண்டுபிடித்துக்காத்தவர் அப்போதைய முதல்வர் கலைஞரே!

 

கோவில்களை மட்டுமா காப்பாற்றினார்? இல்லை , கோவில்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளை அடித்துக்கொண்ட கூட்டத்திடம் இருந்தும் காப்பாற்றினார். வரைமுறை இல்லாமல் இருந்த கோவில் சொத்துக்கள் , அதன் நிர்வாகம் அனைத்தையும் அறநிலையத்துறை என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்!

 

1967 ஆம் ஆண்டு அறநிலையத்துதுறையின் கட்டுப்பாட்டில் 9,600 அறநிலையங்கள் மட்டுமே இருந்தன. துறைக்குக் கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோவில்களும் அவற்றுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் வசம் இருந்தன. அதனை மீட் முதல்வர் கலைஞர் அவர்கள், தனி அலுவலர் ஒருவரை நியமித்தார். அவர் நடத்திய ஆய்வில்தான் தமிழகத்தில்  41,306 அறநிலையங்களும், அவைகளுக்குச் சொந்தமாக 201,343 ஏக்கர் நிலமும் தனியார் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அவைகளில் சுமார் 25,000 அறநிலையங்களும், 65,000 ஏக்கர் நிலமும் அந்தக் காலகட்டத்தில் (1967-75) மீட்கப்பட்டது. 1967 க்கு முன்னால் தமிழ்நாட்டுக் கோவில்களின் ஆண்டு வருமானம் மொத்தம் ரூ. 3 கோடி அளவுக்குத்தான் இருந்தது. 1975-76 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ. 12 கோடி ஆனது.

 

 

அது மட்டுமா கோவில் மூலமாகவும் நன்மைகள் செய்யலாம் என்று, அதைச் செய்து காட்டியவர் தலைவர் கலைஞர் , கோவில்களின் மூலமாக ஏழை பக்தர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தீட்டியவர் முதல்வர் கலைஞர். செய்தவை  சிலவற்றின் பட்டியல்.

 

v மிகக் குறைந்த செலவில் திருமணங்கள் நடத்திக்கொள்ள 1967 - 75 ஆகிய காலகட்டத்தில் மட்டும் 80 திருமண மண்டபங்கள் கட்டிக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர்.

 

v 120 மண்டபங்கள் கட்டித் திறக்கப்படும் நிலையிலிருந்தன.

 

 

v அனாதைக் குழந்தைகளுக்காக அரசு உதவி செய்து கோவில்கள் ார்பில் கருணை இல்லங்களைத் திறந்தவர் முதல்வர் கலைஞர்.

 

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கருணை இல்லத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் திருமுக கிருபானந்தவாரியார். முதல்வர் கலைஞர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர் என்று எம்பெருமானே மகிழ்வார்என்று சொன்னார். வாரியருக்குப் புரிந்தது அது. இன்றைய சிறியார்க்கு அது புரியாது.

 

மேலே உள்ள அனைத்தும் 1967ல் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று , பின்பு தலைவர் கலைஞர் 1969ல் முதல்வராக அதை தொடர்ந்து ஆட்சி கலைக்க படும்வரை ஒரு நாத்திகவாதி செய்த ஆத்திக பணி தான இது .கலைஞரின் செயல்களைப் பற்றிக் கூற ஒரு தலைமுறையே பற்றாது , ஒரு பதிவில் முடியுமா என்ன? 14 ஆண்டுகள் கழித்து அவர் முதல்வராக அமர்ந்து அவர் ஆற்றிய திருப்பணியை அடுத்த பகுதியில் காண்போம் உடன்பிறப்புக்களே

 

தமிழ் வெல்லும் ! வாழ்க தமிழ் !


- கலைஞரிசம் 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திட்டங்களின் தலைவன்!

பத்திரிகையாளர் கலைஞர்!