ஆத்திக கலைஞர் ! பகுதி -3
கடந்த பதிவில் கலைஞர் தமிழக கோவில்களுக்குச் செய்த அரும்பணிகளை பார்த்தோம்!
ஐந்தாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்று 2006
- 2011 காலகட்டத்தில் செய்து காட்டியவை பார்ப்போம்!
ஒரு கொள்கை வாதி - ஒரு
சீர்திருத்தவாதி - ஒரு சனநாயகவாதி - ஒருநடுநிலையாளர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்து கொண்டார். தான்
ஆட்சி ஏற்கும் ஒவ்வொரு முறையும் தேடித் தேடி கோவில்களைச் சீரமைத்தார், அப்படித்தான் தமிழகம் முழுவதும் 4,539 கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
v மிகவும் சிதிலமடைந்து இருந்த பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட 48 கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்.
v தேவாரத் திருமுறைகளிலும் திவ்யப் பிரபந்தங்களிலும் பாடப்பட்டு நீண்ட காலமாக திருப்பணி மேற்கொள்ளப்படாத 30 கோவில்களைப் புனரமைத்தார்.
v நிதி வசதி மிக்க கோவில்களின் உபரி
நிதியிலிருந்து நிதி வசதியற்ற கோவில்களின் திருப்பணிக்கு நிதி உதவிகள் செய்ய வைத்தார். அதாவது ஒரு இடத்தில் முடங்கி கிடைக்கும் நிதியை மற்ற இடத்தில் பிரித்து கொடுத்து மற்ற கோவில்களின் திருப்பணிகளைச் செய்தார், பெயரிலேயே நிதி இருப்பதால் நிதிகளை அவர் கையாண்ட விதம்
பாராட்டுதலுக்கு உரியது !
v காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் குளம்
சீரமைக்கப்பட்டது.
v அஷ்டபுஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரங்கசாமி குளம்
சீரமைக்கப்பட்டது.
v 16 கோவில்களுக்கு தங்கரத பணி முடிவடைந்து தங்கரத உலா நடைபெற்றது.
v 3 கோவில்களுக்கு வெள்ளிரதப் பணி முடிவடைந்து வெள்ளிரத உலா நடைபெற்றது.
v பழுதடைந்த மரத்தேர்கள் அனைத்தும் தயார் நிலைக்குக் கொண்டு
வரப்பட்டது. திருவாரூர் தியாகராசர் சுவாமி கோவில் அம்பாள் தேருக்குப் பதிலாகப் புதுத்தேர செய்யப்பட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது.
v பழனி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம்
தானியங்கி இயந்திரம் மூலமாகத் தயாரிக்கப்பட்டது.
v திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும் நவீன திருமணமண்டபங்கள் கட்டித் தரப்பட்டன.
v சமயபுரம் மாரியம்மன் கோவில் மூலவர் விமானம் தங்க விமானமாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. திருப்பெரும்புதூர்ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவிலுக்கும் தங்க விமானம் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
ஒரு நாட்டின் தலைவன் எப்படிச் சிந்திக்க
வேண்டும் என்று தலைவர்
கலைஞரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக
இருந்தாலும், கோவில்களில் அர்ச்சனை செய்யும் பூசாரிகள் பற்றியும்
சிந்தித்து கிராமப்புற பூசாரிகள் நல வாரியம் அமைத்தார் முதல்வர் கலைஞர். ஒரு கால
வழிபாடு மட்டுமே நடக்கும் அளவுக்கு நிதி வசதியற்ற கிராமப்புற கோவில்களில்
பணிபுரியும் பூசாரிகளுக்கு இலவசமாக மிதிவண்டி கொடுத்தார்.
அறங்காவலர் குழு :
பரம்பரையாக ஒரு குடும்பமோ? ஒரு வர்க்கத்தினரோ? மட்டுமே நிர்வகித்து வந்த கோவில் நிர்வாகத்தில் இந்த குழு அமைத்தது மூலமாக முடிவுக்குக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். இதைக் கொண்டு வந்த பொழுது அதைச் சமூகநீதி கண்ணோட்டத்திலும் , பெண்ணுரிமை கண்ணோட்டத்திலும் சிந்தித்து
அறங்காவலர் குழுவில் ஒரு மகளிர், ஒரு ஆதிதிராவிடர் இடம்பெற வைத்தார்.
அவர் போட்ட சட்டம் என்ன சொல்கிறது
கீழே பார்ப்போம்?
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காகப் பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத
அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர்
குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்குக் குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும்
உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும்
ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம்
பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.
v 114 கோவில்களில் நூலகம் அமைத்தார்.
v ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்களுக்குப் பரிவட்டம் கட்டுவதை
நிறுத்தினார்.
v தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டார். தமிழில் மிகச் சிறப்பாக வழிபாடு செய்பவர்க்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
v அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்
போட்டார்.
ஒரு நிகழ்ச்சியில் தந்தை பெரியாரும் முதல்வர் கலைஞரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அமைச்சரவைக்கான பாராட்டு விழா அது.
அங்கு தான் முதல்வர் கலைஞர் சொன்னார்:
“பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடருவோம்.
அதேநேரத்தில் பக்திப் பிரச்சாரத்தை தடுக்கமாட்டோம்” என்றார். பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு சொன்னது அது.
“தேர் நான்கு
நாட்கள் தான் ஓடுகிறது. மற்ற நாட்கள் எல்லாம் மக்கள்தான் நடக்கிறார்கள்” என்று இரண்டு பயன் களையும் சொன்னார் முதல்வர் கலைஞர்.
'கோயிலைச்
சார்ந்த மக்கள், மக்களைச் சார்ந்த கோயில்கள்' என்று இதைத்தான் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இதை நடைமுறையில் செய்து காட்டியவர் முதல்வர் கலைஞர். இப்படிச் செய்து தருவதால் தனது கொள்கையில் இருந்து நழுவிவிட்டதாக அவர் நினைக்க வில்லை.
"ஒரு புடவைக் கடையைத் திறந்து வைக்கப் போகிறேன். யாரும் அங்கிருக்கும் ஒரு புடவை எடுத்துக் கட்டிக்கொள் என்று கட்டாயப்படுத்த மாட்டீர்கள். அதுபோல நீ கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள். கடவுளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் களது விருப்பத்தைப் பொறுத்ததாகும்” என்றார் முதல்வர் கலைஞர். அத்தகைய விருப்பு வெறுப்பற்ற ஆட்சியைத்தான் அவர் கொடுத்தார்.
'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்' என்ற திருமூலர் கொள்கையே தி.மு.கழகத்தின்
கடவுள் கொள்கை என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
'ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம்' என்ற தாகூரின் தத்துவத்தையே அண்ணாவும்
செயல்படுத்தினார்.
“கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது'.
'கடவுளை நாம் ஏற்றுக் கொள்வது
பெரிதல்ல. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான்
முக்கியம்'.
- இறுதியாகச் சொன்ன இரண்டும் முதல்வர் கலைஞரின் வரிகள். பேரறிஞர் அண்ணா அழகு தமிழில் சொன்னார், கன்னித்தமிழில் கலைஞர் சொன்னார். இயல்புத் தமிழில் தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
ஆத்திகரும், நாத்திகரும் விரும்பும் ஆட்சியாக, அனைத்து மதத்தைச்சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாகத் தான் திராவிட
முன்னேற்றக் கழக அரசு இருந்தது, இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக