கலைஞரும் வேணுகோபால் சர்மாவும்!
யார் இந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா ? பல பேர் அறிந்திடாத பெயர் , ஆனால் அண்ணாவால் " ஓவியப் பெருந்தகை" என்று பட்டம் சூட்டப்பட்டார் , தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் இருக்கவே முடியாது , இந்தியாவில் உலகத்தில் அத்தனை பேரும் ஒருமுறையேனும் இவரது அந்த ஒரு படைப்பை காணாமல் இருக்க மாட்டார்கள். திருக்குறளைப்பற்றி தேடுபவர்கள் இவரின் அந்த படைப்பைக் கண்டே ஆக வேண்டும்! ஆம் அய்யன் திருவள்ளுவர் திருவுருவ படத்தை வரைந்தவர் தான் இந்த வேணுகோபால் சர்மா இவர்வரைந்த படத்தைத்தான் திருவள்ளுவரின் அதிகாரப்பூர்வமான படமாக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்த்தாய் , அறிஞர் அண்ணா , முத்துராமலிங்கத் தேவர் , காயிதே மில்லத் போன்றோர்களது அரிய படங்களையும் வரைந்தவராவார். அது சரி அவருக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் ஒரு கலைஞ...