இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞரும் வேணுகோபால் சர்மாவும்!

  யார் இந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா  ?   பல பேர் அறிந்திடாத பெயர் ,  ஆனால்   அண்ணாவால்   " ஓவியப் பெருந்தகை"   என்று   பட்டம் சூட்டப்பட்டார் ,  தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் இருக்கவே முடியாது ,  இந்தியாவில் உலகத்தில் அத்தனை பேரும் ஒருமுறையேனும் இவரது அந்த ஒரு   படைப்பை   காணாமல் இருக்க மாட்டார்கள்.   திருக்குறளைப்பற்றி   தேடுபவர்கள் இவரின் அந்த   படைப்பைக்   கண்டே ஆக வேண்டும்!   ஆம் அய்யன் திருவள்ளுவர்   திருவுருவ   படத்தை வரைந்தவர் தான் இந்த வேணுகோபால்   சர்மா   இவர்வரைந்த   படத்தைத்தான்   திருவள்ளுவரின்   அதிகாரப்பூர்வமான   படமாக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல்   தமிழ்த்தாய் ,  அறிஞர் அண்ணா ,  முத்துராமலிங்கத் தேவர் ,  காயிதே   மில்லத்   போன்றோர்களது அரிய படங்களையும் வரைந்தவராவார்.     அது   சரி அவருக்கும்   கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ?   ஏன் ஒரு கலைஞ...

கலைஞரும் தொழு நோயாளிகளும்.........

ஆகஸ்ட் 7 2018, தலைவர் கலைஞர்   நம்மைவிட்டுப்   பிரிந்துவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வரத் துவங்கிவிட்டன.     கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட வருத்தமான   மனநிலையிலிருந்தனர் . அந்தக் காப்பகத்தில் இருபது ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தொழுநோயாளி தழுதழுத்த குரலில் பேசுகையில் , " கலைஞர் இல்லையென்றால் நானும் எனது கூட்டாளிகளும் தெருக்களில் தள்ளப்பட்டிருப்போம் என்று கூறுகிறார்.      " நாங்கள் பிச்சையெடுப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று மிகுந்த மனவருத்தத்துடன் கூறுகிறார் , எங்களுக்கு என்று ஒரு இடத்தையும் கொடுத்து   உடலைப்   பராமரிக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த அந்த   மாமனிதனைக்   கண்டு வருந்துகிறார்.   அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடித்தது ,  எப்படி இப்படி ஒரு திட்டம் கலைஞரிடமிருந்து தோன்றியிருக்கும் ? காரணம் அவர் தமிழகத்தை உளமார நேசித்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தினார். அவரின் பார்வை எப...

ஆத்திக கலைஞர் ! பகுதி -3

கடந்த பதிவில் கலைஞர் தமிழக   கோவில்களுக்குச்   செய்த   அரும்பணிகளை   பார்த்தோம்! ஐந்தாம் முறையாக   முதல்வராகப்   பொறுப்பேற்று   2006 - 2011   காலகட்டத்தில்   செய்து காட்டியவை   பார்ப்போம் ! ஒரு   கொள்கை வாதி   - ஒரு சீர்திருத்தவாதி - ஒரு   சனநாயகவாதி   - ஒருநடுநிலையாளர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்து கொண்டார். தான் ஆட்சி ஏற்கும் ஒவ்வொரு முறையும்   தேடித்   தேடி   கோவில்களைச்   சீரமைத்தார் ,  அப்படித்தான் தமிழகம்   முழுவதும்   4,539   கோவில்களுக்குத்   திருப்பணிகள் செய்யப்பட்டு   குடமுழுக்கு விழா நடத்தியவர் முதல்வர் கலைஞர்.   v   மிகவும்   சிதிலமடைந்து   இருந்த பழமையும்   வரலாற்றுச் சிறப்பும் கொண்ட   48   கோவில்களை   பாதுகாக்க நடவடிக்கை   எடுத்தார்.   v   தேவாரத்   திருமுறைகளிலும்   திவ்யப்   பிரபந்தங்களிலும்   பாடப்பட்டு நீண்ட காலமாக திருப்பணி மேற்கொள்ளப்படாத   30   க...