பத்திரிகையாளர் கலைஞர்!
தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே -மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். அவருக்கு பத்திரிகை துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.அவர் ஆரம்பித்ததே பத்திரிகையில் தான், பெரியாரின் அறிமுகமும் கிடைத்தது பத்திரிகையால் தான் பேரறிஞர் அண்ணாவை சந்தித்ததும் அப்படித்தான். இதோ கலைஞர் இப்படித்தான் சந்தித்தார் தன் இதய மன்னன் அண்ணாவை, 1942ஆம் ஆண்டு அண்ணா நடத்திய 'திராவிட நாடு' இதழுக்குக் கலைஞர் 'இளமைப்பலி' என்னும் கட்டுரையை எழுதி அனுப்பினார். இக்கட்டுரை 'திராவிட நாடு' மூன்றாவது இதழில் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகை தந்த அண்ணா அவர்கள் 'இளமைப்பலி' கட்டுரை எழுதிய கலைஞரைச் சந்திக்க விரும்பி அவரை அழைத்து வரச்செய்து நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. 1942ல் 'முரசொலி வெளியீட்டுக் கழகம்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கி மாத இதழாக 'முரசொலி' இதழை வெளியிட்டார் கலைஞர், அதில் ...