ஆத்திக கலைஞர் ! பகுதி -2

27 ஜனவரி 1989  பதினான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சியைக்  கைப்பற்றுகிறார் தலைவர் கலைஞர்.

 

எம்.ஜி.ஆரின் பொறுப்பற்ற 14 ஆண்டுக் கால பணக்கார சார்பு ஆட்சியில் எல்லாத்துறைகளும் சிதைந்து சிதிலமடைந்து கிடந்தன. அதில் அறநிலையத்துறையும் ஒன்று.

 

10.9.1989 - காலையில் தலைமைச் செயலகத்தை நோக்கி சமயச் சான்றோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், மடாதிபதிகள், எழுத்தாளர்கள்,சாமியார்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தார்கள்.  அது கோட்டையா கோவிலா என்று தெரியாத வண்ணம் மாற்றியிருந்தார் முதல்வர் கலைஞர்!

 

கோவில்கள் ஆன்மிக தலங்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சிற்பக் கலையையும் தொன்மையையும் பறைசாற்றுபவை. அதனால் அதனைப் புனரமைக்க தவத்திரு குன்றக்குடி அடிகளார், முன்னாள் நீதியரசர் கிருஷ்ணசாமி, திருவரங்கம் திருமலை, காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஆஸ்தான புலவர் செந்தில்நாதன், இராதா தியாகராஜன் ஆகிய ஐவர் கொண்ட அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவை அமைத்தார்.

 

1989 ஆம் ஆண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழு அமைத்தது போலவே1996 ஆம் ஆண்டு ஆட்சியிலும் ஒரு குழு அமைத்தார் முதல்வர் கலைஞர்.

 

இதில் குன்றக்குடி ஆதினகர்த்தர், திருப்பனந்தாள் மடாதிபதி, திருவாவடுதுறை ஆதின கர்த்தர், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்கராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், கருமுத்து கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்தக் குழுவினர் சொன்ன படி செய்துகொடுத்தவர் முதல்வர் கலைஞர்,

 

   முதல்வர் கலைஞரின் (1996-2001) ஐந்தாண்டுகளில் 2,459கோவில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடந்தன.

 

 

 

 மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில், திருப்பெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை ரெங்கநாதசுவாமி திருக்கோவில்,திருப்பாபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசாமி திருக்கோவில், தஞ்சைபெரிய கோவில், சென்னை மல்லீஸ்வரர் திருக்கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்.

 

 

 

 சோளிங்கர் லெட்சுமி நரசிம்மசாமி திருக்கோவில், சீர்காழிக்கு அருகில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரில் அரவிந்தலோசனர் திருக்கோவில்,சென்னை சென்னகேசவப் பெருமாள் திருக்கோவில், திருப்பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில்.

 

 

 

 

 

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம்) அரியக்குடிதிருவேங்கட முடையான் திருக்கோவில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோவில், சென்னை குறுங்காலீஸ்வரர்திருக்கோவில்,மதுரை சக்கரத்தாழ்வார்சன்னதி காளமேகப் பெருமாள்திருக்கோவில், சென்னைஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,திருவாரூர் மாவட்டம்வேதாரண்யம்,வேதாரண்யேசுவரர் திருக்கோவில்.

 

 

 

 தொட்டியம்அருகில்உள்ள திருநாராயணபுரம்வேத நாராயணப்பெருமாள் திருக்கோவில். திருவானைக்கால் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரிதிருக்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், பவானி சங்கமேஸ்வரர்திருக்கோவில், காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோவில், தாந்தோன்றிமலைகல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில், திருச்சி மலைக்கோட்டையுமானவர் சுவாமி திருக்கோவில், திரு முட்டம் பூவராக ஸ்வாமி திருக்கோவில்,சிவாலயம் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் - ஆகிய கோவில்களுக்குத் திருப்பணியையும் திருக்குடகுழுக்கும் திறம்பட நடத்தியவர் முதல்வர் கலைஞர்!

 

v  'கோவில் சொத்துக்களை அதிகம் மீட்டுக் காட்டியவர் முதல்வர் கலைஞர்.

 

v  பல்லாயிரம் ஏக்கர் நிலமும் மனைகளும் மீட்டுக் கொடுத்தார். கிராமப்புற

 

v  பூசாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தார். கோவில்களில் செயல்படும்

 

v  கருணை இல்லங்களுக்கு 50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கினார்.

 

v  திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதைத் தமிழில் மொழி பெயர்த்து,வெளியிட முயற்சிகள் செய்தார்.

 

 

 

 

அது மட்டும் இல்லாமல் தமிழில் அர்ச்சனை நூல்களை வெளியிட்டவரும் அவரே !

 

 

 

Ø  அருள்மிகு விநாயகர் போற்றி,

Ø   அருள்மிகு முருகன் போற்றி,

Ø  அருள்மிகு சிவன் போற்றி,

Ø  அருள்மிகு திருமால் போற்றி,

Ø  அருள்மிகு நடராசர் போற்றி,

Ø  அருள்மிகு கோதண்டராமர் போற்றி,

Ø  அருள்மிகு துர்க்கையம்மன் போற்றி,

Ø  அருள்மிகுஅனுமன் போற்றி,

Ø  அருள்மிகு நவகோள்கள் போற்றி,

 

 முதலிய தமிழ் அர்ச்சனை நூல்கள் வெளியிட்டார்.

 

திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர்களுக்கு ஓராண்டு காலப்புத்தொளிப்பயிற்சி அளிக்க 20 சைவத் திருமுறை ஆகம பயிற்சி மையங்களும், 7 வைணவ திவ்ய பிரபந்த பயிற்சி மையங்களும் அமைத்தார்.

 

இவை எல்லாம் ஏன் செய்தார்? 'இந்துக்களின் வாக்குகளை வாங்கவா' இல்லை! அவரே சொன்னார்:

 

 

 

இதயத்தில் பதிந்திருக்கும் கொள்கைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றும் கடமை கழக அரசுக்கு உண்டுஎன்று உறுதி எடுத்துக் கொண்டவர் முதல்வர் கலைஞர்!

 

 

 

'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று பிரகடனம் செய்து கொண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறுதிவரை அதில் உறுதியாய் இருந்தவர். தன்னுடைய சுயமரியாதை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனின் சுயமரியாதைக்கு எங்கே, யாரால், எப்போது பங்கம் வந்தாலும் அதைத் தடுப்பதில் முதல் போராளியாக முன்னுக்கு நின்றவரும் அவர்தான்.

 

 

 

கோட்டையாக இருந்தாலும் கோவிலாக இருந்தாலும் தமிழனின் முன்னேற்றத்துக்கு பயன்பட வேண்டும், தமிழைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். கோவிலைக்காட்டி தமிழனையும் தமிழையும் புறக்கணிக்கும் கூட்டத்துக்கு இறுதி வரை எதிராகத்தான் இருந்தார். 

 

1989 - 1991, 1996 - 2001 - ஆகிய ஆட்சிக் காலங்களில் ஒரு நாத்திகவாதி, 'மானமிகு சுயமரியாதைக்காரன்' செய்த ஆத்திக பணி தான இது.

 

மறுபடியும்  , எம்.ஜி.ஆர் நடத்திய அதே திறனற்ற , சர்வாதிகார , அடிமைகளை வைத்து ஊழல் ராணியின் ஆட்சி, வழக்கம் போல 5 வருடம் எல்லா திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு , கலைஞர் உருவாக்கி முடியும் தறுவாயில் இருந்த திட்டங்கள் எல்லாம் தன் பெயரில் போட்டு விளம்பரம் தேடும் பணியிலிருந்தார். தலைவரின் அடுத்த 5 ஆண்டுக் கால ஆட்சியின் திருப்பணிகளை அடுத்த பதிவில் கூறுகிறேன்

 

தமிழ் வெல்லும் ! வாழ்க தமிழ் !


- கலைஞரிசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திட்டங்களின் தலைவன்!

பத்திரிகையாளர் கலைஞர்!