திட்டங்களின் தலைவன்!


கலைஞர் எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன்தான் அணுகுவார். அவர் முதலமைச்சராக இருக்கும்போது படிக்காமல் கையெழுத்து போட்ட கோப்பு ஒன்று கூட இருக்காது.

தனது 90 அகவை வரையில் அவர் எந்தெந்த திட்டங்களுக்கு எந்த தேதிகளில் யாருடன் கலந்தாலோசித்து அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணையில் கையெழுத்துப் போட்டார் என்பதை தேதிவாரியாக கூறக்கூடிய அளவுக்கு அவரது நினைவாற்றல் இருந்தது.

ஒரு திட்டம் போட வேண்டுமென்றால் பல்துறை அறிஞர்கள் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் கூட்டிட்டு பேசி பின்பே முடிவெடுத்தார். ஏன் கூறுகிறேன் என்றால் அதற்குப் பின் வந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அப்படி செய்ய மாட்டார்கள் தான் என்ன கூறுகிறேன் ஓ அதைத்தான் அதிகாரிகள் கேட்கவேண்டும் என்ற அதிகார மமதையில் ஆட்சி செய்தவர்கள் அவர்கள். பின்பு ஜெயலலிதா கடைசி காலங்களில் மாறத் தொடங்கினார்.

அப்படி, தான் மேற்கொண்ட செயலில் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையும், சிரத்தையும், கவனமும் கொண்டிருப்பார். அவர் சிந்தனையில் உதித்து உருவான பல சமூக நீதி சார்ந்த திட்டங்கள் அவரின் விலாசமான பார்வையை நமக்கு உரக்கச் சொல்லும். அதிலும், 1969 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் கலைஞருடைய அரசு செயல்பட்ட விதம், அபாரமானது. ஒரு முழு முதற் திராவிட ஆட்சி, 1967 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றது. அண்ணா இருந்திருந்தால் என்னென்ன வகையில் செயல்பட்டிருப்பாரோ, அதை அவரின் பாதையைப் பின்பற்றி ஆட்சி நடத்திய கலைஞர் செய்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

அனைத்து தரப்பு மக்களைப் பற்றியும் சிந்தித்து அவர்களுக்கு எது நன்மை பயக்கும் அந்த திட்டங்களைக் கொண்டு வந்தார் அவை அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்கள். இன்று எதையெல்லாம் மத்திய அரசு  ஒரு திட்டமாக அறிவிக்கிறதோ அத்திட்டங்களை 30லிருந்து -50 வருடங்கள் முன்னே  சிந்தித்து அதை செய்தும் திட்டமாக காட்டிவிட்டார் !

உதாரணத்திற்கு எல்லோருக்கும் கேஸ் அடுப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு இப்பொழுதுதான் திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறது ஆனால் அதை கொடுத்து அந்த திட்டத்தை முடித்து விட்டார் கலைஞர்.

ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தின் முன்னேற்றத்தை விட 30 வருடம் பின் தங்கி இருக்கிறது குறிப்பாக தேசிய கட்சிகள் ஆட்சி செய்யும் வடமாநிலங்கள்.  அவர் தொடாத ஒரு துறை உண்டோ, அனைத்து துறைகளிலும் ஏதோ ஒரு மக்களுக்கு பயன்படும் திட்டத்தை போட்டு அதை வெற்றிகரமாக செய்து காட்டியவர் தலைவர் கலைஞர்.

அவர் செய்த சாதனைகளும் அவர் போட்ட திட்டங்களையும் எழுதி மாளாது, அவ்வளவு செய்திருக்கிறார்! ஆனால் கலைஞர் என்ன செய்துவிட்டார் என்று கேட்பார்கள் இன்றைய வாட்ஸ்அப் பதிவுகளைப் படித்த வாட்ஸ்அப் போராளிகள்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்திரிகையாளர் கலைஞர்!