திட்டங்களின் தலைவன்!
கலைஞர் எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன்தான் அணுகுவார். அவர் முதலமைச்சராக இருக்கும்போது படிக்காமல் கையெழுத்து போட்ட கோப்பு ஒன்று கூட இருக்காது. தனது 90 அகவை வரையில் அவர் எந்தெந்த திட்டங்களுக்கு எந்த தேதிகளில் யாருடன் கலந்தாலோசித்து அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணையில் கையெழுத்துப் போட்டார் என்பதை தேதிவாரியாக கூறக்கூடிய அளவுக்கு அவரது நினைவாற்றல் இருந்தது. ஒரு திட்டம் போட வேண்டுமென்றால் பல்துறை அறிஞர்கள் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் கூட்டிட்டு பேசி பின்பே முடிவெடுத்தார். ஏன் கூறுகிறேன் என்றால் அதற்குப் பின் வந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அப்படி செய்ய மாட்டார்கள் தான் என்ன கூறுகிறேன் ஓ அதைத்தான் அதிகாரிகள் கேட்கவேண்டும் என்ற அதிகார மமதையில் ஆட்சி செய்தவர்கள் அவர்கள். பின்பு ஜெயலலிதா கடைசி காலங்களில் மாறத் தொடங்கினார். அப்படி, தான் மேற்கொண்ட செயலில் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையும், சிரத்தையும், கவனமும் கொண்டிருப்பார். அவர் சிந்தனையில் உதித்து உருவான பல சமூக நீதி சார்ந்த திட்டங்கள் அவரின் விலாசமான பார்வையை நமக்கு உரக்கச் சொல்லும். அதிலும், 1969 முதல் 197...
கருத்துகள்
கருத்துரையிடுக