கலைஞரும் பொய்களும் !
காலம் காலமாகக் கலைஞர் மேல் பல அவதூறுகளும் பல குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வந்துள்ளன ஒரு மனிதர் மேல் ஏன் இத்தனை வன்மம் என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் அவர் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்தது தான் காரணம். தங்களுக்கு பாதிப்பு வருகிறது என்று தெரிந்தால் பார்ப்பனியம் எதையும் செய்யும் எந்த அளவுக்கும் கீழே இறங்கி வேலை செய்யும் அதன் வெளிப்பாடே கலைஞர் மேல் இத்தனை அவதூறுகள்.
ஏன் ஒரு மனிதர் மீது இவ்வளவு வன்மம்? எதற்காக அவர் மேல் இவரது காழ்ப்புணர்ச்சி?
ஏனென்றால் சாமானியனுக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கும் உழைத்ததால் வந்த வினை. அவர் மீது கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏகப்பட்ட பல குடும்பத்திற்காக சொத்து சேர்த்தார், கொள்ளையடித்தார், விஞ்ஞான ஊழல் செய்தார், என்று பல அவதூறுகளும் அவர் செய்யாத ஒன்றை செய்ததாகப் பல செய்திகள் கட்டமைத்து இணையங்களில், பத்ரிகைகைளில் பரப்பப்பட்டு வந்தன வருகின்றன, வரும் வந்து கொண்டே தான் இருக்கும். அப்பேர்பட்ட குற்றச்சாட்டில் ஒன்றை எடுத்துப்பார்ப்போம் , அப்பொழுது தெரியும் எப்பேர்ப்பட்ட வன்மம் அவர் மீது கட்டமைக்கப்படுகிறது என்று.
உதாரணத்திற்கு, கர்மவீரர்
காமராசருக்கு மெரினாவில் இடம் தராத கருணாநிதி?
உண்மையில் கலைஞர் கர்மவீரருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா?
அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்தாலும் எதிர்த்து அரசியல் செய்தாலும் கலைஞர் காமராசர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
அதற்குக்
கீழ்க்காணும் வரலாற்று நிகழ்வுகளே சாட்சி...
காமராசர்
மறைந்த அன்று அப்போது காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை
காங்கிரசு அலுவலகத்திலேயே காமராசர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சடங்குகளையும் அங்கேயே நடத்தத் திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்தச் செய்தி போனது. கொதித்தார் அவர்!
“காமராசர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த
தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி அரங்கில் வைத்து
அரசு முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
அப்போது
குறுக்கிட்ட அதிகாரி , காமராசர் அப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாததைச் சொல்லி, சில சட்டச் சிக்கல்களைத் தெரிவித்ததோடு,
மத்திய
அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச் சொன்னார். மீண்டும்
கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான்
சொன்னதைச் செய்யுங்கள்...காமராசருக்கு இறுதி மரியாதை
செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என்று கண்டிப்புடன் கூறினார்.
கிண்டியில்
காமராசர் நினைவிடம் அமைந்த அந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டதன் காரணமே காந்தியாரின் தீவிர பக்தரான அவர் இறந்ததும் காந்தி பிறந்தநாள் அன்றே.. அந்த தீவிர காந்தியின் பக்தரான காமராசருக்கு காந்தி மண்டபம் அருகிலேயே
நினைவிடம் தேர்வுசெய்யப்பட்டு அவரது உடலை அந்த இடத்தில் தான் அடக்கம் செய்து
நினைவிடம் அமைத்தனர்.
அப்போது அந்த இடம் மிகவும் புதர்கள் அடைந்து கிடந்ததால் அதை சுத்தம் செய்தனர். அப்போது முதல்வராக இருந்த கலைஞரும் அதில் ஈடுபட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, தலையில் துண்டை தலைப்பாகை போலக்கட்டிக் கொண்டு சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று முன்னாள் நிர்வாகிகள், காமராஜரின் பேத்தி மயூரி தெரிவித்துள்ளது வேறு செய்தி , அதை யாரும் பேசவோ குறிப்பிடவோ இல்லை. ஏனென்றால் கலைஞர் மீது அவதூறு பரப்புவதே நோக்கமாக இருக்கும்பட்சத்தில் எப்படிப்பேசுவார்கள்? இவ்வளவு அவதூறு கூறும் கனவான்கள் காமராஜர் மணி மண்டபத்தோடு நிற்காமல், அவர் நினைவாக என்னென்ன செய்தார் தலைவர் கலைஞர் என்று கூறுவார்களா என்ன ?
இதோ என்ன செய்தார் தலைவர் கலைஞர் என்ற பட்டியல் கீழ்வருமாறு
இங்கு காமராசரின் மார்பளவுச் சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை சாலையைக் காமராசர் சாலை எனப் பெயர் மாற்றியது கலைஞர் ஆட்சிக்காலத்தில்..
மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராசர் பெயர் தாங்கி நிற்பதற்குக் காரணம் கலைஞர் ஆட்சி..
விருதுநகரில் காமராசர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது கலைஞர் ஆட்சியில்..
காமராசர் பிறந்த நாளைத் தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் கல்வி வளர்ச்சி நாள்” என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து,அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே இயற்றியது கலைஞர்...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குக் காமராசரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும்
அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப் படுத்தியதும் கலைஞர் ஆட்சியில்...
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராசரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதைக் கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ,
‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர்.
இன்னுமொரு மக்கள்
அறியாத செய்தி ஒன்று கூறுகிறேன், முதல்வர் கருணாநிதி
தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராசருக்கு அழைப்பு விடுத்தார்.அப்போது காமராசருக்கு உடல்நிலை சரியில்லை.
ஆனாலும், காமராசரின்
வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி,
அண்ணா
சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில்,
மணமக்கள்
அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார்.அதனை ஏற்று, காரிலேயே மேடை வரை வந்து மணமக்களை வாழ்த்தி பேசினார் காமராசர்.
உன்னை தூற்றுவார் தூற்றட்டும் ! போற்றுவார் போற்றட்டும் !
என்றும் உன்னை புகழ்ந்து தான் என் பொழுது கழியும் !
தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க !
- கலைஞரிசம்'
Well written Arun 👍👍👍🙌🙌🙌
பதிலளிநீக்கு