கலைஞரும் குறளும் - 2

 திருவள்ளுவர் சிலை!

மூன்றாவது முறையாக 1989இல் முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம்.
காலையில் ஏதோ சிந்தனை வயப்பட்ட வராத தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாக தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் 
கணபதி ஸ்தபதி தொடர்பு கொள்கிறார்.

அவரிடம் ஸ்தபதியாரே கன்னியாகுமரி கடலில் வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். நாடு இங்கே முடிகிறது என்று கூறுகிறார்கள் அல்லவா! இல்லை; இங்கே நம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்கிற மாதிரி சிலை அமைய வேண்டும். அதுவும் குமரியில் இருந்து வள்ளுவர் நேராக இமயத்தை பார்க்கிற மாதிரி அமைய வேண்டும் என்று கூறுகிறார்.

ஏன் கன்னியாகுமரியில் வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் முடிவு செய்கிறார்? அதற்கு ஒரு காரணம் உண்டு.

அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு, கலாச்சார தூதர்களில் ஒருவராக இருந்தவரை இந்துத்துவ சங்பரிவாரசக்திகள் ஒரு இந்துத்துவத்தின் அடையாளமாக விவேகானந்தரை உருமாற்றினார்கள். இந்தப்பாறைகளில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அலைகள் மோதும் கடப்பாரையின் பறக்கும் காவிக்கொடி எங்கும் ஆக்கிரமித்திருந்தது. எனவே காவியின் குறியீடாக இருக்கும் விவேகானந்தர் பாறையை விஞ்சும்  விதத்தில் பிரம்மாண்டமாக வள்ளுவனுக்கு வானுயர சிலை அமைத்தார் தலைவர்.  கலைஞர். மக்களின் மனதை சரியாக படித்து புரிந்து வைத்து இருந்தால் தான் இப்படி சிந்திக்க முடியும், அதான் கலைஞர்.

விவேகானந்தர் பார்வையில் காணச் செல்லும் மக்களை தானாக சற்றே தொலைவில் நிற்கும் வள்ளுவர் சிலை ஈர்ப்புவிசையால் ஈர்க்க தொடங்கும்.
அதுவரை தமிழகத்தில் தென்கோடி என்றால் நினைவுக்கு வரும்விவேகானந்தர் பாறையை பின்னுக்குத்தள்ளி இனி எந்தக் காலத்திலும் அது திருவள்ளுவர் சிலை என்று மக்கள் மனதில் நினைவுக்கு வரும் அளவிற்கு அதை பிரம்மாண்டமாக அமைத்து நமக்குத் தந்தவர் தலைவர் கலைஞர்.

மசூதியை இடித்து தான் கோயில் கட்டுவோம் என்று இந்துத்துவ கும்பல்கள் இருக்கும் இந்த நாட்டில்தான் எந்த ஊரு சின்னத்தையும் இடிக்காமல் அழிக்காமல் ஆனால் அதைவிட சிறப்பாக ஒன்றை கட்டி அதை இருட்டடிப்பு செய்யக்கூடிய திறமை
அந்த மதிநுட்பம் தான் அவரின் தனிச்சிறப்பு...

அவர் 1989இல் இதை முதல் முதலில்  கூறினார் என்று நினைத்தால் அதுதான் தவறு ?  பின்பு எப்பொழுது கூறினார்?
திருவள்ளுவர் சிலை ஆரம்ப வரலாறு முதல் அதை கட்டி முடிக்கும்வரை  காலவரிசைப்படி கொடுத்துள்ளேன்.

விவேகானந்தர் நினைவு மண்டபம்  பாறையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதல்வர் 
மு.கருணாநிதியிடம் கொடுத்தார் ஏக்நாத் ரணடே.

1975ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையில் எம்.ஜி.ஆர்  கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

1990-91ல் நிதிநிலையில் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1990 செப்டம்பர் 6 ஆம் நாள் சிலை அமைக்கும் பணியை 
மு. கருணாநிதி தொடங்கிவைத்தார்.

ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டது.

1997 இல் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது.

இறுதியாக 2000 ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார்.

இப்பொழுது சிலையின் முழு சிறப்புகளையும் பார்ப்போம்!!!

சிலை அமைப்பு

திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலை குறிப்புகள்

மொத்த சிலையின் உயரம் - 133 அடி

சிலையின் உயரம் - 95 அடி

பீடத்தின் உயரம் - 38 அடி

சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

சிலையின் மொத்த எடை - 7,000 டன்

சிலையின் எடை - 2,500 டன்

பீடத்தின் எடை - 1,500 டன்

பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

"சிலை அளவுகள்"

முக உயரம் - 10 அடி

கொண்டை - 3 அடி

முகத்தின் நீளம் - 3 அடி

தோள்பட்டை அகலம் -30 அடி

கைத்தலம் - 10 அடி

உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி

இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி

கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திட்டங்களின் தலைவன்!

பத்திரிகையாளர் கலைஞர்!