மின் திட்ட நாயகன் - தலைவர் கலைஞர் !!!
தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் கொண்டு வந்த மின் திட்டங்களால் தான் இன்று நாம் மின்
பற்றாக்குறை ஏற்படாமல் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது .
திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது!
1️⃣. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970
2️⃣. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970
3️⃣. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971
4️⃣. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971
5️⃣. வைகை 6 MW மின் திட்டம், 1990
6️⃣. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990
7️⃣. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998
8️⃣. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000
9️⃣. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001
1️⃣1️⃣. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011
1️⃣2️⃣. 7 சர்க்கரை ஆலைகளில் 162 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டங்கள்
1️⃣3️⃣. திருவண்ணாமலை அருணாசலம் சர்க்கரை ஆலையில் 19 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்
1️⃣4️⃣. காஞ்சிபுரம் பழைய சீவரம் 12 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்
1️⃣5️⃣. ஈரோடு வேலம்பாளையம் 10 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டம்
1️⃣6️⃣. சூரிய சக்தி மூலம் 165 KW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள்
1️⃣7️⃣. பேசின் பிரிட்ஜ் 196 MW திறன் கொண்ட டீசல் என்ஜின் மின் உற்பத்தி திட்டம்
1️⃣8️⃣. சாத்தனூர் 7.5 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
1️⃣9️⃣. Parsan's Valley 30 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டங்கள்
2️⃣0️⃣. திருமூர்த்தி 1.95 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
2️⃣1️⃣. முக்குருத்தி 0.70 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
2️⃣2️⃣. நெய்வேலி 250 MW திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி கூடுதல் மின் உற்பத்தி திட்டம்
2️⃣3️⃣. ஜெயங்கொண்டம் 500 MW திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டம்
2️⃣4️⃣. சாமல்பட்டி 106 MW மின் திட்டம்
2️⃣5️⃣. பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 MW மின் திட்டம்
2️⃣6️⃣. சமயநல்லூர் 106 MW மின் திட்டம்
2️⃣7️⃣. திருவாரூர் 107 MW மின் திட்டம்
2️⃣8️⃣. எண்ணூர் 330 MW அனல் மின் திட்டம்
இந்த திட்டங்கள் அனைத்தும் 1️⃣9️⃣6️⃣9️⃣-1️⃣9️⃣7️⃣6️⃣ & 1️⃣9️⃣9️⃣6️⃣-2️⃣0️⃣0️⃣1️⃣ திமுக ஆட்சிக்காலம் வரை உருவானவை.
காற்று, சூரிய சக்தி, கரும்பு சக்கை போன்ற இணைமின் உற்பத்தி திட்டங்களுக்கு முழு வரிவிலக்கும் அளித்திருக்கிறார் கலைஞர்.
#SCADA திட்டம்:
சென்னையில் உள்ள 96 துணை மின்நிலையங்களையும் ஒன்றாக இணைத்து எங்கெங்கு கூடுதல் மின்சாரம் இருக்கிறதோ அதை அங்கிருக்கும் மின்மாற்றி மூலம் மின்சாரம் தேவைப்படும் இடத்திற்கு மாற்றி மின்னோட்டத்தை சீராக்குவதற்காக சென்னையில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் தான் Supervisory Control & Data Acquisition System (SCADA).
2️⃣0️⃣0️⃣6️⃣-2️⃣0️⃣1️⃣1️⃣ல் மீண்டும் திமுக ஆட்சி. அந்த 5 ஆண்டுகளில் கலைஞர் அமல்படுத்திய திட்டங்கள்.
1️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2007
2️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2007
3️⃣. ராமநாதபுரம் 92 MW எரிவாயு மின் திட்டம், 2008
4️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2008
5️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2008
6️⃣. மேட்டூர் 500 MW அனல் மின் நிலையம், 2008
7️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 3), 2009
8️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2009
9️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2009
இது போக சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக 21 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள், மின் பகிர்மானத்துக்கு 233 துணை மின் நிலையங்கள் என்று திமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது.
கலைஞரின் மின் உற்பத்தி திட்டங்களுக்கெல்லாம் மகுடம் போன்றது காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்.
வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான மூலாதாரம்.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.
20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.
அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.
இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப்படுகிறது. அது தான் 400 MW திறன் கொண்ட "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும்.
தமிழ்நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தியான 2284 MW-ல் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மட்டும் மொத்தம் 866 MW உற்பத்திக்கான திட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அதாவது 3ல் ஒரு பங்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கலைஞர் உருவாக்கியதே!
இதை Tangedco இணையதளத்தில் Hydro Stations பக்கத்தில் போய் பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக